பாமக புறக்கணிப்பு: வாக்கு மதிப்பில் பெரிய அளவில் மாற்றமிருக்காது
பாமக புறக்கணிப்பால் வாக்கு மதிப்பால் பெரிய அளவில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.
பாமக புறக்கணிப்பால் வாக்கு மதிப்பால் பெரிய அளவில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.
இந்தத் தேர்தலில் 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்காளர்கள் ஆவர். காலியாகும் 6 இடங்களுடன் ஒன்றைக் கூட்டினால் ஏழு என்ற மதிப்பு வரும். 234ஐ 7 ஆல் வகுக்கும் போது 33.428 என்ற மதிப்பு வரும். இதனுடன் ஒன்றைக் கூட்டினால் வரும் முழு மதிப்பு 34 ஆகும்.
தமிழக சட்டப் பேரவையில் பாமகவுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்கும் போது மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 231 ஆகக் குறையும்.
Advertisement
இந்த எண்ணிக்கையை ஏழால் வகுக்கும் போது, 33.01 என்ற மதிப்பு கிடைக்கும். இந்த மதிப்புடன் ஒன்றைக் கூட்டும் போது கிடைக்கும் முழுமையான மதிப்பு 34 ஆகும். எனவே, பாமக புறக்கணிப்பால் மாநிலங்களவைத் தேர்தல் வாக்கு மதிப்பில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் இருக்காது.
மாநிலங்களவைத் தேர்தல் வாக்கெடுப்பின் போது எத்தனை வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்பதைப் பொருத்தே வெற்றிக்கான இலக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாமகவின் முடிவு திடீரென மாறி, வாக்கெடுப்பில் பங்கேற்றாலும் வாக்கு மதிப்பு 34 என்ற அளவிலேயே இருக்கும்.