கலவரம் நடந்த பகுதிகளில் நுழைய கட்சியினருக்குத் தடை
விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. போராட்டம் நடந்த பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. போராட்டம் நடந்த பகுதிகளில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியையும், சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் பொருட்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னணி சங்கங்கள்,
Advertisement
Advertisement
÷நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் மரக்காணம் மற்றும் அதன் தொடர்புடைய ஏனைய பகுதிகள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் இந்த தடையாணை பிறப்பிக்கப்படுகிறது எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.