முகப்பு
தமிழ்நாடு

பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

வடகிழக்குப் பருவமழை நீரை சேமிக்கும் வகையில் பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 23 அக்டோபர், 2016 at 3:59 AM
பரந்து விரிந்துள்ள பரந்தூர் ஏரி. (வலது) பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் ஏரிக் கால்வாய்.
பகிர்:

வடகிழக்குப் பருவமழை நீரை சேமிக்கும் வகையில் பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்-சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ளது பரந்தூர். இந்த ஊராட்சியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரியை நம்பி பரந்தூர், மேட்டுப் பரந்தூர், பள்ளப்பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 750 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் பரந்தூர் ஏரி, முறையான
பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. மேலும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்த நிலையிலும், மதகுகள் சேதமடைந்தும் உள்ளன. இதனால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சிலர், பம்ப் செட் மூலம் ஏரியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, தங்களது நிலங்களுக்கு பாய்ச்சுகின்றனர். வசதியில்லாத ஏழை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் பரந்தூர் ஏரியின், மதகு, கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.