முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கு: 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கின் விசாரணையை பூந்தமல்லி நீதிமன்றம் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 2:32 am IST
பகிர்:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கின் விசாரணையை பூந்தமல்லி நீதிமன்றம் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், 'திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்குச் சொந்தமான இடம் காஞ்சிபுரம் மாவட்டம் தாளம்பூரில் உள்ளது. சுமார் 2.94 ஏக்கர் பரப்பிலான இந்த நிலத்தை ரூ.3.5 கோடி முன்பணம் செலுத்தி வாங்கினேன். ஆனால் இடத்தை எனக்கு கொடுக்காமல் வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பணத்தை திருப்பிக் கேட்டதால் மிரட்டப்பட்ட நான் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செல்வி, அவரது உறவினர் ஜோதிமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments