முகப்பு
தமிழ்நாடு

சாலை மறியல்: தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர்

திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றபோது திமுக பிரமுகர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 1:25 am IST
பகிர்:

திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றபோது திமுக பிரமுகர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் ரயில்வே மேம்பால ரவுண்டானாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, வர்த்தகர் சங்க கட்டடத்திலிருந்து அனைவரும் பேரணியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, முன்வரிசையில் வந்து கொண்டிருந்த திமுக பிரமுகர் திடீரென மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். அப்போது, அவருடன் வந்து கொண்டிருந்தவர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் உடனடியாக அவரை தடுத்து மீட்டனர். விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர் திருவாரூர் நகராட்சி 28-ஆவது வார்டை சேர்ந்த மோகன் என்பது தெரிய வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments