தமிழகத்தில் 40% பேருந்துகளே இயங்கின: தொமுச தகவல்
தமிழகத்தில் வியாழக்கிழமை 40 சதவீதப் பேருந்துகளே இயக்கப்பட்டன என தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறினார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை 40 சதவீதப் பேருந்துகளே இயக்கப்பட்டன என தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தொமுச பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு பொதுச் செயலர் சுகுமாறன், ஏஐடியுசி பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பங்கேற்ற நூற்றக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து தொமுக பொருளாளர் கி.நடராஜன் கூறியது:
தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்தவாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பெருமளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 40 சதவீதப் பேருந்துகள் மட்டுமே மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர் என்றார் நடராஜன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.