காவி மண் தாமரையை மலர வைக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்
காவி மண் தாமரையை மலர வைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவி மண் தாமரையை மலர வைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருச்சியில் கருஞ்சட்டை மாநாடு நடந்தது. அதில் பேசிய சுப.வீரபாண்டியன் கரிசல் மண்ணில் கரும்பு முளைக்காது, தமிழகத்தில் தாமரை எந்நாளும் மலராது என்று பேசினார்.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பிரிவினை பேசுபவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, இது காவி மண். காவி மண்ணை அழித்து கரிசல் மண் என்றால், அதனை அப்புறப்படுத்தி
காவி மண் தாமரையை மலர வைக்கும்.
Advertisement
Advertisement
கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின், ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை?. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக வலுப்பெறாது, ஸ்டாலினின் நகர்வு தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.