தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது: ஹெச்.ராஜா
தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை வேலுநாச்சியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பொன்.மாணிக்கவேலை பாஜக இயக்குகிறது என்றால் எந்த சிலை கடத்தல் கும்பல் வைகோ, திருமாவை இயக்குகிறது? சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்படும்போது இவர்கள்தான் வரவேற்றனர்.
தற்சமயம் எதிர்க்கிறார்கள் என்றால் இவர்களின் கருத்துகள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேலுநாச்சியார், குயிழி போன்றோர்கள் பற்றி பாடத்திட்டத்தில் அதிகளவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.