புத்தாண்டு அசம்பாவிதங்களை தடுக்க வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு
புத்தாண்டை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி ராஜேந்திரன்
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டையொட்டி, அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து அனைத்து மாவட்ட காவல்துறைக்கும், முன்னெச்சரிக்கையாக இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி இரவு வரை வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், பேருந்து நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனையிட தனியாக போலீஸாரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.