மதுரை - மண்டபம் இடையே இன்று சிறப்பு பயணிகள் ரயில் இயக்கம்
மதுரைக் கோட்டத்துக்குள்பட்ட ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரைக் கோட்டத்துக்குள்பட்ட ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை- மண்டபம் இடையே டிசம்பர் 24ஆம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மண்டபத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், நண்பகல் 12 மணிக்கு மதுரை வந்தடையும்.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 24ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், மாலை 6.30 மணிக்கு மண்டபம் சென்றடைகிறது. இதேபோல், மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், இரவு 11.40 மணிக்கு மதுரையை அடைகிறது.
Advertisement
Advertisement
ஆனால், மதுரையிலிருந்து டிசம்பர் 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேசுவரம் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண்-16780) அன்று நள்ளிரவு 12.15-மணிக்கு புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.