கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள்
கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடைக்கானலைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்:
கொடைக்கானலில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகள், மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையின் காரணமாக யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. இதனைத் தடுக்க அரசு தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.