முகப்பு
தமிழ்நாடு

தொழில்நுட்பக் கோளாறு: சிங்கப்பூர் விமானம் 14 மணி நேரம் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூர் செல்ல வேண்டிய

Updated On : 6 நவம்பர் 2018, 1:39 am IST
பகிர்:


தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம், சுமார் 14 மணி நேரம் தாமதமாக திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. 
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்ல பயணிகள் விமானம் தயார் நிலையில் இருந்தது. அதில் 70 பயணிகள் சிங்கப்பூருக்கு செல்ல இருந்தனர்.
இந்நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து பயணிகள் அனைவரையும் விமான நிறுவனம் சார்பில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், திங்கள்கிழமை விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மதியம் 2.30 மணிக்கு பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments