புதியவராய் மாறுவோம்
நரகாசுரன் அழிந்த நல்ல நாளில் புத்தாடை அணிவோம்; புதியவராய் மாறுவோம் என நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி தனது தீபாவளி
நரகாசுரன் அழிந்த நல்ல நாளில் புத்தாடை அணிவோம்; புதியவராய் மாறுவோம் என நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி:
தீபஒளி திருநாளாம் தீபாவளி நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்புஒளி பரவட்டும். நரகாசுரன் அழிந்த அந்த நல்லநாளை நினைத்து நலம் பெறுவோம். விரோதம், குரோத, சந்தேகம் போன்ற அசுரதனங்கள் மறைந்து அன்பு, ஆதரவு, ஒற்றுமை ஆகிய நற்குணங்கள் ஓங்கட்டும். புத்தாடைகள் அணிவோம். புதியவராய் மாறுவோம். இனிப்புகள் உண்வோம். இனிதாக வாழ்வோம். மத்தாப்பு கொளுத்தி மங்களம் காண்போம். தேவி அன்னை பாலாவின் அருளால் அனைவரும் நலமாக வாழ அன்பான தீபாவளி ஆசிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.