தமிழ்நாடு

சித்த மருத்துவர் தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்கு

சித்த மருத்துவர் தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

DIN

சித்த மருத்துவர் தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவா் தணிகாசலம், கரோனா நோய்த்தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வா் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவியது. 

இதனைத் தொடா்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபா் குற்றத் தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், தணிகாசலத்தை வரும் 20- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. 

சித்த மருத்துவர் தணிகாசலம் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஜாமீன் கோரி தணிகாசலம் தாக்கல் செய்த மனுவை எழும்பூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை!

சர்வதேச காற்றாடி திருவிழாவை பட்டம்விட்டு தொடக்கிவைத்த மோடி, ஜெர்மனி பிரதமர்!

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

SCROLL FOR NEXT