மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையைத் தொடங்கினார் மு.க.அழகிரி
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
பாண்டிகோவில் உள்ள துவாரகா பேலசில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் புதிய கட்சி தொடக்கம், பிற கட்சிகளுக்கு ஆதரவு உள்ளிட்டவை பற்றியும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
Advertisement
Advertisement
ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மேடையில் ஆதரவாளர்கள் திரண்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேடையில் கூட்டம் சரிசெய்யப்பட்ட பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசி வருகிறார்.
மு.க.அழகிரி இல்லத்திற்கு ஆதரவாளர்கள் வரவேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.