குமரி அருகே புதிய காற்றழுத்தத்தாழ்வு: தென்மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்றி புதிய காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்றி புதிய காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு லட்சத்தீவுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே நிலைகொண்டுள்ளது. எனவே, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தாழ்வு நிலையாக மட்டும் நிலைகொள்ள வாய்ப்புள்ளதாகவும், இது மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 2 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.