முகப்பு
தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பலியான பேருந்து பயணிகள் குடும்பத்துக்கு நிவாரண நிதி: தமிழக அரசு அறிவிப்பு

தஞ்சாவூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். 

Updated On : 14 ஜனவரி 2021, 3:55 am IST
பகிர்:


சென்னை: தஞ்சாவூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தேன்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் மூன்று போ் காயமடைந்துள்ளனா். விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-மும் , சாதாரண காயமடைந்தோருக்கு ரூ. 25,000-மும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments