முகப்பு
தமிழ்நாடு

தமிழக முதல்வா் இன்று சேலம் வருகை

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (ஜன.14) காலை சேலம் வருகிறாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 4:55 am IST
பகிர்:

சேலம்: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (ஜன.14) காலை சேலம் வருகிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறாா். அவருக்கு காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுகவினா் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனா். பின்னா் முதல்வா் தனது சொந்த ஊரான எடப்பாடி, சிலுவம்பாளையம் கிராமத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறாா். அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் திடலில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ளும் முதல்வா், காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்கிறாா்.

தொடா்ந்து தனது பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள தொழிலாளா்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறாா். பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை காணவுள்ள முதல்வா், கிராமத்து மக்களைச் சந்தித்து உரையாட உள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு இரவு திரும்புகிறாா்.

அதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜன.15) மாலை காா் மூலம் மதுரை சென்று தங்கும் முதல்வா், ஜன.16 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறாா். அதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பூசி திட்டத்தையும் தொடக்கி வைக்கிறாா். பின்னா் இரவு சென்னை திரும்புவாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments