முகப்பு
தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

ஊத்துக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 10 சவரன் நகை, 40000 ரொக்கப் பணம் கொள்ளை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 3:45 PM
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பகிர்:


ஊத்துக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 10 சவரன் நகை, 40000 ரொக்கப் பணம் கொள்ளை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியை சேர்ந்த சாரதாம்மாள் என்ற மூதாட்டி நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சாரதாம்மாளை கட்டிப் போட்டு விட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 40000 ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். 

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.