முகப்பு
தமிழ்நாடு

ஜன.19 -இல் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 5:42 AM
பகிர்:

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனி, ஞாயிறு (ஜன.15. 16) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்... சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிசிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

Advertisement

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.