தமிழ்நாடு

ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகள் வேடசந்தூர், ராமநாதபுரம்

தில்லையாடி ராஜா

திண்டுக்கல்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகளாக கடந்த  அரை நூற்றாண்டு காலம் சிறப்பு பெற்று வந்த 7 தொகுதிகளில், 2 தொகுதிகள் மட்டும் அந்த சென்டிமெண்டை 2021 தேர்தலிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

தமிழகத்தில், ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, மொடக்குறிச்சி, வேடசந்தூர், ராமநாதபுரம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்ற சென்டிமெண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக  நீடித்து வந்தது.

இந்த 7 தொகுதிகளிலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக நேரடியாக களம் இறங்கியது. அதிமுக அணியில், மேட்டூர், மொடக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தபோது, ஆரணியில் அதிமுக, மேட்டூரில் பாமக, வீரபாண்டி மற்றும் சங்ககிரியில் அதிமுக, மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றிருந்தனர். ஆனால், திமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கும் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தொகுதிகள் என்ற சிறப்பினை ஆரணி உள்ளிட்ட 5 தொகுதிகளும் இழந்துள்ளன.

தொடரும் 2 தொகுதிகளின் சிறப்பு:

அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியும், ராமநாதபுரம் தொகுதியும் சென்டிமெண்ட் வரலாற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.காந்திராஜன், அதிமுக வேட்பாளர் பா.பரமசிவத்தை விட 17,553 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார்.

அதேபோல், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாஜக வேட்பாளர் குப்புராமைவிட 50,479 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 5 சென்டிமெண்ட் தொகுதிகளில் வெற்றிப் பெற்ற போதிலும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டன. அதே நேரத்தில் 2 சென்டிமெண்ட் தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றிப் பெற்றிருந்தாலும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT