முகப்பு
தமிழ்நாடு

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 2 செப்டம்பர் 2021, 2:52 pm IST
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பகிர்:

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் சித்த பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் பேசியது, “ தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளாக சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

Advertisement

Advertisement

இந்தியாவிலேயே முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் அமைக்கப்படும். சித்த பல்கலை.யில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகாவும் இடம்பெறும்.

மேலும், தமிழகத்தில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.266.73 கோடியில் அமைக்கப்படும் என்றார்”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments