புதுவையில் மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: பாதிப்பு 21 ஆக உயர்வு!
புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. திங்கள்கிழமை மேலும் 354 சிறார்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் தற்போது பன்றிக் காய்ச்சல் தோற்றம் பரவி வருகிறது. தினசரி பன்றிக் காய்ச்சலைக் கண்டறியச் சோதனை செய்யப்படுகிறது. இதன்படி திங்கள்கிழமை கடுமையாக காய்ச்சல் பாதித்த 82 பேரிடம் சோதனை செய்ததில் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை வரை 15 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு குழந்தை உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 15 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.