முகப்பு
தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்க இறங்கிய விவசாயி பலி

விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்க இறங்கிய விவசாயியின் தலையில் கல் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 21 மே 2023, 9:46 am IST
பகிர்:

விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்க இறங்கிய விவசாயியின் தலையில் கல் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வசித்து வருபவர் விவசாயி தங்கவேல் மகன் மணி (42). இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ள நிலையில், அவரது உறவினரின் பசுமாடு ஒன்று  50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து உள்ளது.

மணி.

இதனையடுத்து அவரது உறவினரான தங்கதுரை, கண்ணன், முத்துராஜா, விவசாயி மணி ஆகிய நான்கு பேரும் கிணற்றில் இறங்கி பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிணற்றின் மேல் பகுதியில் இருந்த கட்டுக்கல் சரிந்து மணியின் தலை மீது விழுந்ததில், பலத்த காயம்மடைந்த  மணி ரத்த வெள்ளத்தில் சரிந்து நீரில்  மூழ்கிய நிலையிலேயே உயிரிழந்தார். 

Advertisement

Advertisement

இதனையடுத்து ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த  பசுமாட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் விவசாயி மணியின்  உடலை சுமார் 5 மணி நேர  போராட்டத்திற்கு பின்னர்  உடலை மீட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

உறவினரின் பசுமாட்டை மீட்க கிணற்றில் இறங்கிய விவசாயின் தலை மீது கல் விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments