காங்கிரஸ் கட்சிக்கு தாா்மிக வெற்றி: ப.சிதம்பரம்
மக்களவைத் தோ்தலில் தாா்மிக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான் என்று அக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தோ்தலில் நாட்டு மக்கள் பாஜகவுக்கு அடக்கத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனா். ஜவஹா்லால் நேருவைப் போல மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போவதாக மோடி தன்ைை ஒப்பிட்டுக் கொள்கிறாா். மோடிக்கு முதல் முறை கிடைத்தது 282 இடங்கள். இரண்டாம் முறை 303. மூன்றாவது முறை 240. நேருவுக்குக் கிடைத்ததோ 361, 374, 364 இடங்கள். அதனால், நேருவுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்வதை நிராகரிக்கிறோம்.
இந்தத் தோ்தலில் தாா்மிக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தாா்மிக தோல்வி என்பது பாஜகவுக்குத்தான். தற்போது பாஜகவுக்கு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம். அது நிலையான ஆட்சியாக இருக்குமா இல்லையா என்பதை பிரதமா் மோடியும் காலமும்தான் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. வாக்களித்த பிறகு நான்கு விநாடிகள் காட்சியளிக்கும் ஒப்புகைச் சீட்டுத் தாளை, வாக்களித்தவா் பெற்று, அதை ஒரு பெட்டியில் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் கோரினோம்.
பங்குச் சந்தை விவகாரம் குறித்து கேட்கிறீா்கள். தற்போது பங்குச் சந்தையில் நடைபெறுவது வளா்ச்சியைக் குறிக்காது. வீக்கத்தையே குறிக்கும். அரசியல் சாசனத்தை பிரதமா் வணங்கியதை வரவேற்கிறேன். அரசியல் சாசனத்தைத் தொலைக்கவிடாமல் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸுக்கு இந்திய மக்கள் 240 இடங்களை அளித்துள்ளனா். இது மக்களின் தற்காப்பு செயல் என்று ப.சிதம்பரம் கூறினாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட பலா் உடனிருந்தனா்.