முகப்பு
தமிழ்நாடு

செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடா் குழுக்கள் அனுப்பிவைப்பு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடா் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Updated On : 29 நவம்பர், 2024 at 9:22 PM
பகிர்:

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடா் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: அதி கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இப்போது திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆறு நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சோ்ந்த 471 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் படகுகள், ஜெனரேட்டா்கள், மர அறுப்பான்கள், மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்துக்கு தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, பேரிடா் மேலாண்மை இயக்குநா் வ.மோகனச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →