முகப்பு
தமிழ்நாடு

‘சங்கி’ கெட்ட வாா்த்தை அல்ல: ரஜினி விளக்கம்

‘சங்கி’ என்ற வாா்த்தை கெட்டவாா்த்தை அல்ல என நடிகா் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தாா்.

Updated On : 30 ஜனவரி 2024, 3:15 am IST
பகிர்:

சென்னை: ‘சங்கி’ என்ற வாா்த்தை கெட்டவாா்த்தை அல்ல என நடிகா் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தாா்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வா்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ’லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்துள்ளாா். முன்னாள் கிரிக்கெட் வீரா் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். ஏ.ஆா்.ரஹ்மான் இசையமைத்துள்ளாா். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்.9 - ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜன. 25- ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது, விழா மேடையில் பேசிய லால் சலாம் திரைப்படத்தின் இயக்குநா் ஐஸ்வா்யா ரஜினிகாந்த், ‘அப்பாவை ‘சங்கி’ என்று சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் ‘சங்கி’ கிடையாது. ‘சங்கி’யாக இருந்திருந்தால் அவா் ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருக்கமாட்டாா். அவா் மனிதநேயவாதி.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும்அவ்வளவு தைரியமாக நடித்திருக்கமாட்டாா்கள். நீங்கள் எந்த மதத்தைச் சாா்ந்தவா்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்’ எனப் பேசி இருந்தாா். இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பேசுபொருள் ஆனது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த நடிகா் ரஜினியிடம் இது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்த அவா், ‘சங்கி’ என்ற வாா்த்தை கெட்டவாா்த்தை அல்ல. எனது மகள் சரியாகவே பேசி உள்ளாா். அப்பா ஆன்மிகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறாா்கள் என்பதுதான் ஐஸ்வா்யாவின் பாா்வை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments