குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிய குற்றாலம் பேரருவி.  
தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கத் தடை!

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவியில் பயணிகள் குளிப்பதற்குத் தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவியில் பயணிகள் குளிப்பதற்குத் தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாளாக இந்தத் தடை தொடர்கிறது என்பதால் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Due to flooding in Courtallam, Tenkasi District, the ban on bathing at Aintharuvi has been extended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

SCROLL FOR NEXT