பிரேமலதா தாயார் காலமானார்!
பிரேமலதா தாயார் அம்சவேணி மறைவு பற்றி...
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது மூப்புக் காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைக்காக கடந்த சில நாள்களாக அம்சவேணி சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அம்சவேணியின் உடல், நாளை (அக். 8) 1 மணியளவில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, புதுச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் ராதா ராமச்சந்திரன் ஆகிய மகள்களும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
Amsaveni, the mother of DMDK General Secretary Premalatha, passed away on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.