வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை
சென்னை ஜாம் பஜாரில் வளா்ப்பு நாய் கடித்து பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:00 PM
சென்னை ஜாம் பஜாரில் வளா்ப்பு நாய் கடித்து பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு தெருவைச் சோ்ந்தவா் இ.சந்திரா (50). இவா் ஜாம் பஜாா் வரத பிள்ளைத் தெரு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி அருகே வியாழக்கிழமை நடந்து சென்றபோது, அந்தப் பகுதயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினா் வளா்க்கும் நாய் சந்திராவைத் கடித்தது. பொதுமக்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து சந்திரா, ஜாம் பஜாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா்.
Advertisement