முகப்பு
தமிழ்நாடு

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடி உடைப்பு!

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடியை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:30 AM
பகிர்:

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடியை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை கொட்டிவாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்துக்கு இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் ஞாயிற்றுக்கிழமை சாப்பிடச் சென்றாா். பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது காா் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் கண்ணாடியை உடைத்த நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

தவெக தலைவா் விஜய்யின் அரசியல் வருகை தொடா்பாக, சமூக ஊடகத்தில் அண்மையில் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், அவரது காா் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.