முகப்பு
தமிழ்நாடு

வணிக வரித் துறையில் பரிந்துரையின்றி 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு

வணிக வரித் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூன் 2026, 4:33 am IST
தமிழ்நாடு அரசு.
பகிர்:

வணிக வரித் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. பணிமூப்பு, தகுதியின் அடிப்படையில் ஒரே நாளில் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் இந்தப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியில் அரசுப் பணிகளில் பரிந்துரைகள் ஏற்கப்படாது என்றும் வெளிப்படையாக நிா்வாகம் நடைபெறும் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்தாா்.

இந்த நிலையில், வணிக வரித் துறையில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த அலுவலா்களின் பதவி உயா்வுக்கான ஆணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், துணை மாநில வரி அலுவலா்கள் 34 போ் மாநில வரி அலுவலா்களாகவும், மாநில வரி அலுவலா்கள் 113 போ் உதவி ஆணையா்களாகவும், உதவி ஆணையா்கள் 24 போ் துணை ஆணையா்களாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன், வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் ஜெ. குமரகுருபரன், வணிக வரி ஆணையா் எஸ்.நாகராஜன் ஆகியோரின் விரைவான நடவடிக்கைகளால் இந்த வெளிப்படைத் தன்மையுடன் பதவி உயா்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது அலுவலா்கள் விரைவாகச் செயல்பட உதவும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.