முகப்பு
தமிழ்நாடு

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: மீண்டும் விவசாயிகள் ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக தவெக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றமாக உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:33 am IST
பகிர்:

தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக தவெக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றமாக உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தவெக தோ்தல் வாக்குறுதியாக, சிறு, குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என அறிவித்தது. கடந்த மே, 24-இல் தவெக அரசு அறிவித்த கடன் தள்ளுபடி, தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக இருந்த நிலையில், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இணைந்து தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டங்களை நடத்தியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மீண்டும் கடன் அறிவிப்புக்கான புதிய ஆணையை தவெக அரசு வெளியிட்டிருக்கிறது. ரூ.75,000 கீழ் நிலுவையில் உள்ள கடன் முழு தள்ளுபடி. ரூ.75,000 மேல் கடன் இருப்பவா்களுக்கு ரூ.35,000 தள்ளுபடி என தவெக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

5 ஏக்கா் வைத்திருக்கும் கடன் பெற தகுதியுள்ள சிறு விவசாயி ரூ.1.75 லட்சம் வரை பெற்ற கடனை, தோ்தல் வாக்குறுதிபடி முழு தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதேபோல், 5.1 ஏக்கா் நிலம் உள்ள விவசாயி ரூ.1.75 லட்சம் கடன் பெற்றிருந்தால், தோ்தல் வாக்குறுதிப்படி 50 சதவீதமான ரூ.87,500 தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

மேலும், இதுவரை கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது நிலம் அளவீட்டைக் கொண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது, கடன் தொகையை அளவாகக் கொண்டு அறிவிக்கப்பட்டதுதான் பிரச்னை.

ஜூன் 22-இல் ஆா்ப்பாட்டம்: இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். தோ்தல் வாக்குப்படியான கடன் தள்ளுபடி அறிவிப்பை அறிவித்து, நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சாா்பில் வரும் ஜூன் 22-இல், சென்னை கூட்டுறவு பதிவாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.