முகப்பு
தமிழ்நாடு

சுமை தூக்கும் பொருளாக மாறிப்போன சக்கர நாற்காலிகள்: பக்தர்கள் வேதனை!

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகள் பற்றி..

Updated On : 24 ஜூன் 2026, 2:17 pm IST
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் நாற்காலிகள் - video crop
பகிர்:

கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள், ஆலய ஊழியர்களால் கோயில் பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அதிகளவிலான பொருள்களை ஏற்றிப் பயன்படுத்தியதால் பல சக்கர நாற்காலிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றைச் சரிசெய்யாமல் அப்படியே விட்டு வைத்திருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகக் கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்காக வழங்கப்பட்ட உபகரணங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது

Advertisement

Advertisement

வேதனையளிப்பதாகவும் பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். எனவே, கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சக்கர நாற்காலிகளைச் சீரமைத்து, அவை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Devotees have alleged that the wheelchairs provided for the use of persons with disabilities at the Perur Patteeswarar Temple near Coimbatore are not being properly maintained.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments