முகப்பு
தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 26 ஜூன் 2026, 5:14 am IST
பகிர்:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (38). இவா் மனைவியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளாா். தனது 11 வயது மகளிடம் மதுபோதையில் தொடா்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2024-இல் அந்தச் சிறுமி தனது டியூஷன் ஆசிரியரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா். அந்த ஆசிரியா் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, வெங்கடேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மேலும் 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.77,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments