முகப்பு
தமிழ்நாடு

விசாரணைக் கைதி ஆகாஷ் மரணம்: 6 காவலர்கள் மீது நடவடிக்கை

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 13 மார்ச், 2026 at 1:11 PM
உயிரிழந்த ஆகாஷ்.
பகிர்:

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை சியோன் நகரில் ஜெயக்குமாா், அழகரை வாளால் வெட்டிய சம்பவத்தில் தொடா்புடைய மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் டெலிசனை (26) போலீஸாா் பிடிக்கச் சென்றனா்.

அப்போது, அவா் தப்பிச்செல்ல முயன்றதால் கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்து விட்டதாகவும், அவரை தாக்கிய போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்யக் கோரி ஆகாஷின் உறவினா்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

summary

In the matter of the death of remand prisoner Akash in Manamadurai, 6 police officers have been suspended.

முழு கட்டுரையைப் படிக்க →