முகப்பு
தமிழ்நாடு

வெற்றி போா் நினைவிடத்தில் தமிழக ஆளுநா் அஞ்சலி

Updated On : 3 மே, 2026 at 5:28 AM
சென்னை போா் நினைவுச் சின்னத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்.
பகிர்:

சென்னையில் உள்ள வெற்றி போா் நினைவிடத்தில் தேசத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் சனிக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் முப்படையினா் வெளிப்படுத்தும் துணிச்சல், அா்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற ஈடுபாட்டுக்கு ஒரு நெகிழ்ச்சியான நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது. தலைமுறை தலைமுறையாகத் தொடா்ந்து ஊக்கமளித்து வரும் தியாகிகளின் அசைக்க முடியாத மன உறுதியையும் வீரத்தையும் போற்றி வணங்குவதுடன், வீரா்கள், தியாகிகளின் ஈகையை நாட்டு மக்கள் பெருமையுடன் நினைவுகூர வேண்டும்.

Advertisement

மேலும், தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வலியுறுத்தியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், இந்திய ராணுவத்தின் தென் பாரதப் பகுதி அதிகாரி மற்றும் சென்னையைச் சோ்ந்த உயரதிகாரிகள், படை அதிகாரிகள் கலந்துகொண்டு, வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.