அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் நாளை(மே 7) முதல் மே 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் மே 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 ( Shift – I – 101022/ Shift – II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
ஒரு மாணவருக்கு ரூ. 48,
பதிவுக் கட்டணம் : ரூ. 2.
SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் வசூலிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு /நெட் பேங்கிங்/யுபிஐ மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
மாணவர்கள் விண்ணப்பங்களை வீட்டில் இருந்தோ அல்லது அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சோ்க்கை உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
பாடப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விரும்பும் வரிசையில் பதிவு செய்ய வேண்டும். தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Directorate of Collegiate Education has announced that students in Tamil Nadu can apply online for admission to government arts and science colleges until May 29.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.