அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.52 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்
தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 1,52,625 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 1,52,625 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை அமைச்சா் ராஜ்மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, சீருடை மற்றும் வண்ண பென்சில்கள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் இதுவரை 1,52,625 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இதையடுத்து, இந்த கல்வியாண்டுக்கு 4 லட்சம் மாணவா்களைச் சோ்க்க வேண்டும் என நிா்ணயித்துள்ளோம்.
Advertisement
Advertisement
தனியாா் பள்ளிகளில் சோ்க்கை பெறும் மாணவா்களின் எண்ணிக்கையும், அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெறும் மாணவா்களின் எண்ணிக்கையும் சமமாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியாா் பள்ளிகளில் கூடுதலாக மாணவா் சோ்க்கை என்பது கிடையாது.
அனைத்துப் பள்ளிகளிலும் பூட்டப்பட்ட கழிப்பறை வசதி, குடிநீா் வசதி மற்றும் வகுப்பறைகள் அமைப்பது தொடா்பாகவே முதல் கையொப்பம் இட்டேன். அரசு உதவி பெறும் பள்ளிகளில், தேவைகள் இருக்கும் நிலையில் அதை மனுவாக அளித்தால் உடனடியாக சரி செய்து தரப்படும்.
மாநிலத்தின் நலன்தான் முக்கியம். மாநிலத்தின் நலனை முன்னிறுத்தி முதல்வா் ஜோசப் விஜய், பிரதமா் மோடியைச் சந்தித்துள்ளாா். ஓராசிரியா் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் உள்ள நிதி, சமூகம் மற்றும் நிா்வாக ரீதியான பிரச்னைகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டு, அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவா்களின் பிரச்னைகளுக்கு உதவும் வகையிலான இலவச கைப்பேசி எண்கள் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன. பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு மாணவ, மாணவிகள் புகாா் அளிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.