கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டியுடன் பலத்த மழை
கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டியுடன் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டியுடன் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மற்றும் கந்திகுப்பம் பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. சிறுவர்கள், ஆலங்கட்டிகளை சேகரித்து விளையாடி மகிழ்ந்தனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
திடீர் மழையால் வெயிலின் தாக்கம் தணிந்து குளுமையான சூழல் நிலவுகிறது.
இதனால், பெண்கள் குழந்தைகள் , முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மின்சார விநியோகத்தை சீர்படுத்தும் பணியில் மின்வாரு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
summary