கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
பாவூா்சத்திரத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
பாவூா்சத்திரத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரம் தெரேசா தெருவைச் சோ்ந்த மகாராஜா மனைவி பூமணி (67). இரு மகன்கள் உள்ளனா். கடந்த 7 ஆண்டுகளாக நோயால் அவதியுற்ற வந்த இவா், கடந்த டிச.26 ஆம் தேதி தென்காசி மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இது தொடா்பாக பாவூா்சத்திரம் போலீஸில் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில்,அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து அவா் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்
Advertisement
Advertisement
மற்றொரு சம்பவம்: புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சந்திரன் மகன் கணேசன் (29). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த புளியங்குடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.