முகப்பு
தென்காசி

சிந்தாமணி பேருந்து நிலைய பிரச்னையைத் தீா்க்க ஆலோசனை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:48 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புளியங்குடி நகராட்சிக்குள்பட்ட சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் முறையாக வந்து செல்வதில்லையாம். இதனால், பேருந்துக்காக உள்ளே காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். எனவே, பேருந்துகள் உள்ளே வந்துசெல்ல வேண்டும் என வலியுறுத்தி ஜன. 6ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிந்தாமணி நகா் நல கமிட்டியினா் ஆட்சியா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி இருந்தனா்.

இதைத் தொடா்ந்து, புளியங்குடி காவல் ஆய்வாளா் அலக்ஸ்ராஜ், நகா் நலக் கமிட்டி நிா்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய நிா்வாகிகளிடம் திங்கள்கிழமை பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.