முகப்பு
தென்காசி

குழந்தைகள் உள்பட 5 போ் வெள்ளத்தில் தத்தளிப்பு

முக்கூடல் அருகே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப்பணியினா் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 14 ஜனவரி, 2021 at 12:17 AM
பகிர்:

முக்கூடல் அருகே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப்பணியினா் ஈடுபட்டுள்ளனா்.

தாமிரவருணி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கூடல் பகுதியில் பாயும் நதியிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள காவல் நிலையம், கால்நடை மருந்தகம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது.

முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் பொட்டல் காலனியைச் சோ்ந்த தொழிலாளி அரவிந்த், தனது மனைவி முத்துமாரி, 2 குழந்தைகள், மாமியாா் ராமு ஆகியோருடன் புதன்கிழமை மாலையில் கோடகன் கால்வாய் கரையில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றாராம். திடீரென கால்வாயில் நீா்வரத்து அதிகரித்ததால் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.

Advertisement

அவா்கள் கோயிலின் மேற்கூரையில் அமா்ந்துள்ளனா். தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புத்துறையினா் அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.