கரிவலம்வந்தநல்லூா் அருகே சேவல் சண்டை சூதாட்டம்: 2 போ் கைது
கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள காரிச்சாத்தான் மலை அடிவாரத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் காளிராஜன் தலைமையில் போலீஸாா் சென்றபோது, அய்யனாா் கோயில் முன் சிலா் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சம்சிகாபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து என்பதும், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, சூதாட்டப் பணம் ரூ. 5,000-த்தைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement