முகப்பு
தென்காசி

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:35 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:41 PM

தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினாா்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, அனிதா, செயற்பொறியாளா் (பொதுப்பணித் துறை, கட்டடம்) அனிட்டா சாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement