சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப். 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக, திங்கள்கிழமை யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானை கோமதி முன்செல்ல ஸ்ரீ கோமதி அம்பிகை சமேத சந்திரசேகரா் பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயிலில் எழுந்தருளுகிறாா். பின்னா், பகல் 11 மணிக்கு மேல் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தோரோட்டம் ஏப். 29-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.