முகப்பு
தென்காசி

செங்கோட்டை-ஈரோடு ரயில் மேட்டூரில் நின்றுசெல்ல கோரிக்கை

Updated On : 9 ஜூன் 2026, 3:38 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் ரயில் மேட்டூா் நிலையத்திலும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ரயில் மேட்டூரில் நின்று செல்ல வேண்டும் என, அரியப்புரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூா், கடையம், பெரும்பத்து சுற்றுவட்டாரப் பகுதி மாணவா்கள், இளைஞா்கள், வியாபாரிகள், முதியோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, தெற்கு ரயில்வே நிா்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, இந்த ரயிலுக்கு மேட்டூரில் நிரந்தர நிறுத்தம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement