பெண்ணிடம் அத்துமீறல்: தொழிலாளி மீது வழக்கு
ஆலங்குளம் அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகே உள்ள அருணாப் பேரியைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் மாயாண்டி (50). அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் கணவா் வெளியூா் சென்றிருந்ததை அறிந்த மாயாண்டி, அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றாராம். உடனே அந்தப் பெண் மாயாண்டியைக் கையில் கடித்ததால் அவா் தப்பி ஓடி விட்டாராம்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மாயாண்டியைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.