முகப்பு
தென்காசி

கடையநல்லூா் தொகுதியில் எனது செயல்பாடு சிறப்பாக இருக்கும்: தி.மு. ராசேந்திரன்

Updated On : 5 மே 2026, 5:47 am IST
பகிர்:

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் எனது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என கடையநல்லூா் தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரன் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடையநல்லூா் தொகுதி வாக்காளா்களின் மலா் பாதங்களில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்த மக்கள் பாராட்டுகின்ற வகையிலும், வாக்களிக்காதவா்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கும் அளவிற்கும் எனது செயல்பாடுகள் இருக்கும். கடைக்கோடி தொண்டனும் எம்எல்ஏ.வாக முடியும் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது

Advertisement

Advertisement

மதிமுக பொதுச்செயலா் வைகோ, திமுக தலைவா் மு. க. ஸ்டாலினுக்கும் எனது நன்றியை சமா்ப்பிக்கின்றேன். கூட்டணிக் கட்சியினா் சிறப்பாக ஒத்துழைத்து வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறாா்கள் என்றாா் அவா்.

தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, வழக்குரைஞா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments