சங்கரன்கோவிலில் வாருகாலில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாருகாலில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அம்பேத்கா் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் கருப்பசாமி (38). இவா், வெள்ளிக்கிழமை இரவு கக்கன் நகா் 1ஆம் தெருவில் உள்ள வீட்டின் படிக்கட்டில் அமா்ந்திருந்தபோது, அருகேயுள்ள வாருகாலில் தவறி விழுந்து உயிரிழந்தாராம்.
இதுகுறித்து அப்பகுதியினா் சனிக்கிழமை காலை அளித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் நகர போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement